மீன்களுக்கு உணவாகும் கார்பன் டை ஆக்சைடு!





Image result for co2



கரியமிலவாயு இனி விலங்குகளுக்கு உணவு!

விவசாயம், உணவுத்துறை மூலம் வெளியாகும் கரியமிலவாயுவை விலங்குகளுக்கு உணவாக்கும் தொழில்நுட்பத்தை இங்கிலாந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த டீப் பிரான்ச் பயோ டெக்னாலஜி(Deep branch Biotechnology) நிறுவனம், கார்பன் டை ஆக்சைடை விலங்குகளுக்கு உணவாக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது.  கார்பன் டை ஆக்சடை வெளியிடும் நிறுவனங்களோடு இணைந்துள்ள இந்த நிறுவனம், சிமெண்ட், மின்சாரம், ஆக்சிஜன், புரதம் ஆகியவற்றைத் தயாரிக்கிறது.

இதிலுள்ள புரதச்சத்து மீன்களுக்கும் பிற விலங்குகளுக்கும் உணவிடப் பயன்படுகிறது. முதலில் இந்நிறுவனத்தின் கண்டுபிடிப்பான பாக்டீரியா, கார்பன் டை ஆக்சைடை உண்கிறது. இது வெளியிடும் வாயுவைப் பக்குவப்படுத்தினால், புரத உணவு தயாரிக்கப்படுகிறது.  2021 ஆம் ஆண்டு புரத உணவை தொழிற்சாலைகள் நிறுவி பெருமளவு தயாரிக்க டீப் பிரான்ச்  நிறுவனம், முடிவு செய்துள்ளது.

கரியமிலவாயுவை பாக்டீரியா மூலம் புரத உணவாக்குவது 1970 ஆம் ஆண்டிலேயே உருவான ஐடியாதான். ஆனால் தற்போதுதான் அதனை வணிகரீதியில் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது இதே ஐடியாவை அமெரிக்காவைச் சேர்ந்த காலிஸ்டா(Calysta), டென்மார்க்கைச் சேர்ந்த (யுனிபயோ) ஆகிய நிறுவனங்களும் செயல்படுத்த தொடங்கியுள்ளன. எனவே எதிர்காலத்தில் வெப்பமயமாதலை எதிர்கொள்வதற்கான இந்த முயற்சி வெற்றிபெறவும் வாய்ப்புள்ளது.

நன்றி: நியூ சயின்டிஸ்ட்