பொருளாதாரத்தை காப்பாற்ற முயலும் குடிமகன்!


நாட்டை காப்பாற்றும் வங்கியாளர்!

Image result for Unelected Power: The Quest for Legitimacy in Central Banking and the Regulatory State



ங்கிலாந்து துணை கவர்னராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற சர் பால் டக்கர், ஹார்வர்டிலுள்ள ஆபீசில் தங்கி வங்கி குறித்த 568 பக்கங்கள் கொண்ட Unelected Power: The Quest for Legitimacy in Central Banking and the Regulatory State நூலை எழுதியுள்ளார். “அமெரிக்காவில் பல லட்சம் மக்கள் தம் வீடுகளை இழக்க காரணம், மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம். நம்மை ஆள்வது யார்? என்ற கேள்வியை அவர்கள் ஏன் எழுப்பவில்லை” என நேரடியாக பேசுகிறார் டக்கர்.
லண்டனின் வடமேற்குப்பகுதியான காட்சல் பகுதியைச் சேர்ந்த டக்கர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பட்டதாரி. இடது,வலது என சாயாமல் ஜனநாயகத்தை காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மனிதர். பணவீக்கத்தை கட்டுப்படுத்த வரிவிகிதங்களை அறிவிப்பதோடு வங்கிகளின் நடைமுறைகளையும் கட்டுப்படுத்தும் பொறுப்பை டக்கர் முக்கியமானது என கருதுகிறார். “மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள், ஊழியர்களைக் கொண்ட வங்கிகளை நிர்வகிக்க தனி கமிட்டி தேவையில்லை. சரியான தலைவர் கிடைத்தாலே போதும்” என தற்போதைய நிலையை விமர்சிக்கிறார். இங்கிலாந்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை சமாளித்த அனுபவஸ்தர் என்ற நிலையில் பால் டக்கரின் அறிவுறுத்தல்கள் முக்கியமாகின்றன.