வசுந்த்ரா ராஜே மீது சிறுநீர் கழித்த அமைச்சர்!


சிறுநீர் கழிப்பது நமது உரிமை! 


Related image



ராஜஸ்தானைச் சேர்ந்த அமைச்சர் சாம்புசிங் கடேசர், திறந்தவெளியில் உச்சா போய் உலகளவில் வைரலாகியுள்ளார்.
ராஜஸ்தானில் விரைவில் சட்டமன்றதேர்தல் வரவிருக்கும் நிலையில் அங்கு நடந்த பாஜக தேர்தல் பேரணியில் பங்கேற்றார் அமைச்சர் சாம்புசிங். இரண்டரை லட்சம் பேர் பங்கேற்ற பேரணியில் ஒரு கழிவறை கூட அங்கு அமைக்கப்படவில்லை.  விழா நிகழ்வில் சிறுநீர் சுனாமியாக பெருக தடுமாறிய சாம்புசிங், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பேனர் அருகிலேயே சிறுநீர் கழித்து ஆசுவாசமானார். இந்திய அரசு ஸ்வச் பாரத் திட்டத்தை பிரசாரம் செய்து வருகையில் நீங்களே இப்படி செய்யலாமா? பத்திரிகையாளர்கள் கேட்க, அறச்சீற்றம் கொண்ட சாம்புசிங், “திறந்தவெளியில் மலம் கழித்தால்தான் பிரச்னை. சிறுநீர் கழித்தால் நோய்கள் பரவாது. இப்பழக்கம் நம் கலாசாரத்தில் தொன்று தொட்டு வருவதுதான்” என டிபிக்கல் விளக்கம் கொடுத்து அலற வைத்தார். சாம்புசிங்கின் உச்சா மேட்டரை, ஸ்வச் பாரத் திட்டத்தையும் இணைத்து இணையத்தில் மீம்ஸ் சுனாமியே தொடங்கிவிட்டது. மீம்ஸ் நாயகன் சாம்பு!