கொலை செய்வது எப்படி?


சீரியல் கொலைகாரர்கள்!




Related image

எட்மண்ட் கெம்பர்!

1964 ஆம் ஆண்டு கெம்பரின் கொலைப்பயணத்தை பாட்டியைக் கொன்று தொடங்கினார்.  கொலை செய்வது எப்படி என அறியவே இந்த கொலை என புதுமை விளக்கம் கொடுத்தவரை குமட்டில் குத்தி சிறையில் தள்ளியது போலீஸ். ஆறு ஆண்டுகளுக்கு ரிலாக்ஸாக விடுதலை ஆனவர், கற்பழிப்பு, கொலை என பரபரப்பாக செயல்பட்டு தன் அம்மா உட்பட எட்டுப்பேரை சொர்க்கத்திற்கு அனுப்பினார்.

ரோட்னி அட்கலா

1943 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸில் பிறந்த அட்கலா, ராணுவ வீரராக இருந்து தன் மர்ம நடவடிக்கைகளால் வெளியேற்றப்பட்டார். 1968 ஆம் ஆண்டில் சிறுமியை வல்லுறவு செய்து கொன்றார். காதல் நாடகமாடி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மட்டுமே கொன்ற க்ரைம் கழுகு அட்கலா கலிஃபோர்னியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கலியோனார்டா கியானிகியுலி(1894-1970)

இத்தாலியைச் சேர்ந்த கியானி, தன் மகன் உயிருக்கு ஆபத்து என சிலர் ஜாதகம் பார்த்து சொல்ல, அவனைக் காப்பாற்ற கொலைக்கணக்கை தொடங்கினார். மூன்று பேரைக் கொன்று அவர்களின் உடல் கொழுப்பிலிருந்து சோப்பும், டீ கேக்குகளையும் தயாரித்து பக்கத்து வீட்டினருக்கு கொடுத்தார். 30 ஆண்டு சிறைதண்டனை அனுபவித்து இறந்துபோனார்.