வேதாளர் அசத்தும் மர்மச்சிலை ரகசியம்!




The Phantom


வேதாளர் அதிரடிக்கும்

மர்மச்சிலை.....


இலங்கோ பழங்குடிகளிடமிருந்து தெய்வச்சிலை(இரண்டு மான்கள் ஒன்றாக இணைந்தது) லோகா என்பவரால் கடத்தப்படுகிறது. இவர் பெங்காலியா நாட்டு அதிபர் லூகாவின் சகோதரர்.


யார் திருடியது என்று தெரியவில்லை. பாதுகாக்கும் வீரர் மதுபோதையில் விழுந்து கிடக்கிறார். இந்த தகவல்களைக் கேட்டு வேதாளர் துப்பறிய தொடங்குகிறார். அதற்காக உதவி கோருகிறார் அதிபர் லூகா.

உடனே லோகாவை ஃபாலோ செய்கிறார் வேதாளர். அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை கும், டிஷ்யூம், ஐயோ, வுட்ரா ங்கொய்யால என வில்லன் அலற அலற கதை சொல்கிறார்கள்.

ராணி காமிக்ஸின் வெளியீடு. குறைந்த விலையில் நிறைவான காமிக்ஸ். ஆனால் வேதாளருக்கான சண்டைக்காட்சிகள் குறைவு. 

டெவில் கதை முழுக்க வந்தாலும் அதற்கும் கதையில் பங்கு கிடையாது.

நன்றி: பாபு பெ.அகரம்