சமூகநலத்திட்டங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன










இந்திய அரசு சிஎஸ்ஆர் திட்டங்களுக்கான நிதியை இரண்டு சதவிகிதம் அதிகரித்து அதனை கட்டாய செயல்முறையாக்கியுள்ளது. பிராண்டு மதிப்பு மற்றும்  கண்துடைப்பாக சிஎஸ்ஆர் செயல்பாடுகளை பெருநிறுவனங்கள் செய்துவருகின்றன. சமூகத்தில் அது என்ன விளைவை ஏற்படுத்தும். விளக்குகிறார் சம்ஹிதா குட் சிஎஸ்ஆர் அமைப்பு நிறுவனர் பிரியா நாயக். 


பெருநிறுவனங்கள் சிஎஸ்ஆர் திட்டத்தை எம்முறையில் செயல்படுத்தியுள்ளன?

2013 ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டப்படி சில கம்பெனிகள் சிஎஸ்ஆர் செயல்பாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவில் 2015-16 காலகட்டத்தில் 95.4 பில்லியன் டாலர்களிலிருந்து 138.28 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதனை கட்டாயச்சட்டமாக்கும்போது மேலும் பல்வேறு நிறுவனங்கள் இச்செயல்பாட்டை மேற்கொள்வார்கள்.

அரசுடன் இணைந்து செயல்படுவது இதில் என்ன விளைவை ஏற்படுத்தும்?

இந்தியாவில் மக்கள் நல திட்டங்களை பெருமளவில் முன்னெடுப்பது இந்திய அரசு. ஆனால் அதனை ஊக்கமாக செய்வதில்லை. பெருநிறுவனங்கள் அரசுடன் இணையும்போது கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எளிதாக தீர்க்கமுடியும். கேர்மதர் திட்டத்திற்கு மோட்டரோலா நிதியுதவி வழங்கி கர்ப்பிணி(நாகலாந்து, ராஜஸ்தான், மகாராஷ்டிரா) தாய்மார்களுக்கு ஆலோசனைகளை அளித்து உதவியது. ஆந்திராவிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு ரெக்கிட் பென்கிஸர் நிறுவனம் இம்முறையில் சுகாதார பணிகளை விழிப்புணர்வு செய்தது.

பெருநிறுவனங்களின் தங்களின் பிராண்டு விளம்பத்திற்காக சமூகநலத்திட்டங்களை மேற்கொள்கின்றனவா?

டிஹெச்எஃப்எல் நிறுவனமும் எங்களுடைய சம்ஹிதா நிறுவனமும் இணைந்து திறன் மேம்பாட்டு செயல்பாடுகளை வழங்குகிறோம். இது வங்கித்துறைக்கு தேவையான பணியாளர்கள் கிடைப்பதற்கும் பயிற்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் வாய்ப்பு தருகிறது.
-பிரியா நாயக், சம்ஹிதா குட்சிஎஸ்ஆர்.