கும்பமேளாவுக்காக திருமண தடை!




Image result for yogi adityanath caricature


உ.பியில் திருமணத்திற்கு தடை! 

உத்தரப்பிரதேசத்தின் பிரக்யாராஜில்(அலகாபாத்) கும்பமேளா தொடங்கவிருப்பதால் மாநிலத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு கூட தடை விதித்து அதிர்ச்சி தந்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும் கும்பமேளா விழா உலகளவில் கவனம் பெறும் விழா என்பதால், முதல்வர் யோகி ஆதித்யநாத் இக்காலகட்டத்தில் நடைபெறும் விழாக்களை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அச்சிட்டு கல்யாண மண்டபம் மற்றும் ஹோட்டல்களில் ஒட்டவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை மூடி கங்கையின் புனிதம் காக்கும் பணியையும் முதல்வர் யோகி தொடங்கியுள்ளார். ஜனவரி 15 தொடங்கும் கும்பமேளாவில் ஆறு முக்கிய தினங்களில் நாடு முழுவதுமிருந்து வரும் பக்தர்கள் குளிப்பதற்காக அரசு ஒதுக்கியுள்ளது.