குட்டி தொழிலதிபர் ஆதித்யன் ராஜேஷ்!








துபாயில் டெக் கம்பெனி! - பதிமூன்று வயது அதிபர்!


கேரளாவைச் சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ், பதிமூன்று வயதில் தொழில்நிறுவனத்தை தொடங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். துபாயில் வசிக்கும் ஆதித்யன், போரடிப்பதற்கான இணைய வடிவமைப்பு, லோகோக்களை செய்யத்தொடங்கி ஆர்வமாகி இன்று மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கியுள்ளார். 

ஐந்து வயதில் கணினியின் கீபேடுகளை தட்டத்தொடங்கி பதிமூன்று வயதில் அப்ளிகேஷனை உருவாக்கி டிரிநெட் சொல்யூஷன்ஸ்  என்ற நிறுவனத்தை தன் பள்ளி நண்பர்களை வேலைக்கு வைத்து நடத்தி வருகிறார் குட்டி தொழிலதிபர் ஆதித்யன் ராஜேஷ். 

"கேரளாவின் திருவில்லாதான் என் சொந்த ஊர். ஐந்து வயதில் துபாய்க்கு இடம்பெயர்ந்தோம். அப்போது அப்பா கணினியில் டைப் செய்வதை கற்றுத்தந்தார். " என டெக் பயணத்தின் நதிமூலம் சொல்லுகிறார் ஆதித்யன். 

பதினெட்டு வயதானால்தான் அதிகாரப்பூர்வ கம்பெனி நிறுவனராக முடியும் என்பதால் கோடிங்கும் கையுமாக கம்பெனியை நிலைநிறுத்த உழைத்து வருகிறார் ஆதித்யன்.