பொதுப்போக்குவரத்து இலவசம்!











பொதுப்போக்குவரத்து இலவசம்!


லக்ஸம்பர்க் நாடு, உலகிலேயே முதல்முறையாக தன் நாட்டிலுள்ள பொதுப்போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.

சோஷலிச தொழிலாளர் கட்சி, பசுமைக்கட்சி ஆகியவற்றோடு கூட்டணி அமைத்த ஜனநாயக கட்சி தேர்தலில் வென்றுள்ளது. ஆட்சிக்கு வந்த எக்ஸேவியர் பெட்டல், சூழல் மாசுபாடுகளை குறைக்கவும், போக்குவரத்து பிரச்னைகளை தீர்க்கவும் ஆலோசித்து வந்தார். தற்போது அரசின் பேருந்துகள், ட்ராம்கள், ரயில்கள் அனைத்தும் இலவசம் என அதிரடியாக அறிவித்து மக்களை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.

சராசரியாக ஒரு லட்சம்பேர் வசிக்கும் லக்‌ஸம்பர்க் நகருக்கு பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளிலிருந்து தினசரி 2 லட்சம் பேர் பணிக்காக உள்ளே வந்து செல்கின்றனர். இதன்விளைவாக இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் ஓட்டுநர் 33 மணிநேரங்களை(2016) வீணாக இழக்க நேரிடுகிறது.
நகரின் 2 ஆயிரத்து 590 கி.மீ தொலைவுக்குள் தற்போது இரண்டு மணிநேரம் மணிக்க 2 யூரோக்கள் செலவாகிறது. அரசின் உத்தரவு இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே செல்லும். இதோடு போதைப்பொருட்களை பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி ஆகியவை சர்ச்சைக்குரியதாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.