நாயை கற்பழித்த கூட்டம்!





Image result for dog


நாயை கடத்திய கூட்டம்! 

மும்பையின் மால்வானி பகுதியைச் சேர்ந்த சுதா ஃபெர்னாண்டஸ், விலங்குநேயத்துடன் தெரு நாய்களுக்கு உணவு படைப்பது தினசரி வழக்கம். ஒருநாள் வழக்கம்போல உணவுதர நாய் அருகே போக அது பயந்துவிலக நொந்துபோனார். அப்போதுதான் நாயின் பாலுறுப்பில் ரத்தம் வடிவதைக் கண்டு அதிர்ந்தார். “நாயின்’பாலுறுப்பு கடுமையாக சேதப்பட்டிருந்தது. வலியில் துடித்த நாயினால் சரியாக உட்கார கூட முடியவில்லை” என்கிறார் சுதா பெர்னாண்டஸ்.

கால்நடை மருத்துவரிடம் நாயை கொண்டுபோய் சோதித்தபோது, நாயை அடையாளம் தெரியாத சிலர் வல்லுறவுக்கு உட்படுத்திய அவலம் தெரிய வந்துள்ளது. அப்போது அருகிலுள்ள ஆட்டோ ஓட்டுநர், நள்ளிரவில் போதைப்பொருட்களுக்கு அடிமையான நான்கு பேர் நாயை கயிற்றால் கட்டி வல்லுறவில் ஈடுபட்டு அதன் பாலுறுப்பை சிதைத்திருப்பது குறித்த அதிர்ச்சி தகவலை தந்துள்ளார்.