குடும்ப கஷ்டத்தை தீர்க்க வங்கி கொள்ளை!









பொம்மைத் துப்பாக்கி திருடர்! 



ஹைதராபாத்தைச் சேர்ந்த டெக் ஊழியர் வங்கியில் துப்பாக்கி முனையில் கேஷியரை மிரட்டி இரண்டரை லட்சம் கொள்ளையடித்தார். ரிசல்ட்? காமெடிதான். மணிகொண்டா பகுதியிலுள்ள தனியார் வங்கியில் மாலை 3.30 க்கு பர்தா அணிந்து வந்த டேவிட் பிரவீன், நேராக கேஷியர் சிவசங்கர் கேபினுக்கு சென்றார். பொம்மைத்துப்பாக்கியை நீட்டி ஜஸ்ட் 2.5 லட்ச ரூபாயை அசால்டாக கேட்டார். கொடுக்க மறுத்த சிவசங்கரை  கன்னத்தில் குத்தி பணத்தை எடுத்துக்கொண்டு ஓடியவரை வங்கி ஊழியர்கள், மக்கள் விடாப்பிடியாக துரத்தினர். உடனே டம்பி வெடிகுண்டை வெடிச்சு உங்களுக்கு இப்பவே அட்வான்சாக தீபாவளி கொண்டிடுறேன் என மிரட்டிய பிரவீன் வேகமாக ஓடி காரில் ஏறி தப்ப முயன்றார். ஆனால் மக்கள்கூட்டம் அவரது மிரட்டலை காதிலேயே வாங்காமல் அங்கேயே போட்டு புரட்டி எடுத்து போலீசில் ஒப்படைத்தது.
ஐ.டியில் புதிய வேலைக்கு மாறிய பிரவீனுக்கு, சம்பளம் போடாமல் கம்பெனி இழுத்தடித்தது. ஸ்கூல்பீஸ், வீட்டுச்செலவு என பிரச்னைகள் வெடிக்க பிளாஸ்டிக் பிஸ்டல், டம்மி பாமுடன் பிரவீன் வங்கியை கொள்ளையடிக்க கிளம்பிய வீரதீர கதையை ஹைதரபாத் போலீஸ் பார்ப்போரிடமெல்லாம் சொல்லி டைம்பாஸ் செய்து வருகிறது.