தனியாக நிற்கும் அவுட்ஹவுஸ் மர்மம்!








தனியாக நிற்கும் அவுட்ஹவுஸ்!

மிச்சிகனிலுள்ள செடார் ஏரி அருகே, அவுட் ஹவுஸ் ஒன்று உள்ளது. இது எதற்கு கட்டப்பட்டுள்ளது என்றால் பலரும்  பல கதைகளைப் பேசுவார்கள். இதனைக் கட்டியவர் பெயர் வில்லியம் நெல்சன். இவர் தன்னுடைய மனைவி மற்றும் ஏழு மகள்களிடமிருந்து சிறிது தனிமை விரும்பி இதனை அமைத்தார்.

இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த ஓய்வறையில் கழிவறை வசதிகள் உண்டு. பெரும்பாலும் ஏரியைச் சுற்றிப்பார்க்க வரும் பயணிகளே இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். 1875 ஆம் ஆண்டு உருவான இந்த அவுட்ஹவுஸ் சிலமுறை தீ விபத்துகளைச் சந்தித்து மீண்டிருக்கிறது.

நன்றி: அட்லஸ் அப்ஸ்குரா