ஆயுர்வேதத்தை நவீன வடிவில் பயன்படுத்துவதுதான் என்னுடைய ஐடியா - மீரா குல்கர்னி , ஃபாரஸ்ட் எச்ன்ஷியல்ஸ்

 











மீரா குல்கர்னி
ஃபாரஸ்ட் எசன்ஷியல்ஸ்

மீராவின் நிறுவனமான ஃபாரஸ்ட் எசன்ஸியல்ஸ் 2 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. இன்று இந்த பிராண்டின் பொருட்கள் இந்தியா முழுக்க 80 கடைகளில் கிடைக்கிறது. 190 ஹோட்டல்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. 120 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. 

ஆர்வம் பிறந்தது எப்படி ?

நான் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் கலைப்படிப்பு படித்தவள். எங்கள் பூர்விகம் உத்தரகாண்ட்டின் டெரி கார்வாய் நகரம். எனக்கு தொடக்கத்தில் இருந்தே அங்கு பிரபலமாக இருந்த ஆயுர்வேத மருத்துவத்தில் ஆர்வம் இருந்தது. எனவே, அதை பயன்படுத்தி சோப்புகள் தயாரிக்க நினைத்தேன். 

எப்படி சாதித்தீர்கள்?

எங்கள் பூர்விக ஊரில் இருந்த வைத்தியர்கள், நவீன உயிரி வேதியியலாளர்கள் என பலரையும் ஆலோசனை சொல்லக் கேட்டு த்தான் சோப்புகளை தயாரிக்க தொடங்கினேன். இதில் பயன்படுத்தும் எண்ணெய்கள் அனைத்துமே குளிர்வான முறையில் ஆட்டி எடுத்தவை. இதனால் ஆயுர்வேத தன்மை நாங்கள் செய்யும் பொருட்களில் இருக்கும். அவை மாறாது. 

தொழிலாக மாறிய மனதிற்கு பிடித்த விஷயம் என்று கூறலாமா?

உண்மைதான். நீங்கள் கூறியபடியே வைத்துக்கொள்ளலாம். நாங்கள் முதலில் பெற்ற பெரிய ஆர்டர் என்பது ஹையாத் ஹோட்டலுடையது. பிறகுதான் சோப்புகளுக்கு மவுசு ஏற்பட்டு 2005 -2006 இல் ஆறு கோடி அளவுக்கு வருமானம் கிடைத்தது. மேலும் எஸ்டீ லாடர் என்ற நிறுவனம், மீராவின் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியது. பிறகு நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வாங்கியது. 

உங்களது பொருட்களில் தனித்துவமாக நினைக்கும் சிறப்பம்சம் என்ன ?

நாங்கள் தயாரிக்கும் பொருட்கள் எவற்றையும் விலங்குகள் மீது சோதிப்பதில்லை. ஆடம்பர பொருட்கள் என்றாலும் சோப்பு, வாசனை திரவியங்கள் என எவற்றையும் நாங்கள் விலங்குகளை வைத்து சோதிப்பதில்லை. எங்களுக்கென குறிப்பிட்ட கருத்தியலோடு இயங்கி வருகிறோம். 2011 -16 ஆண்டு வரையில் வணிகத்தில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளேன். இதுவும் எனக்கு சாதனைதான். 


ஃபெமினா 2021



 







கருத்துகள்