அசல் நேர்மை ப்ரோ இது!



Image result for honest


எவரெஸ்ட் நேர்மை!

ராஜஸ்தானைச் சேர்ந்த இதயநோயாளி தவறவிட்ட சிகிச்சை பணத்தை அபேஸ் செய்யாமல் அவருக்கே திருப்பிக்கொடுத்து நேர்மையின் சிகரமாகியுள்ளார் ஆட்டோ ஓட்டுநர்.

ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த பிரேம்லதா கெலாட், இதயநோயாளி. தன் வாழ்நாள் சேகரிப்பான 4 லட்சத்தை பைபாஸ் சிகிச்சைக்காக எடுத்துக்கொண்டு ஆட்டோவில் சென்றபோது பணப்பையை தவறுதலாக ஆட்டோவிலேயே வைத்துவிட்டு தல்தெஜ் எனுமிடத்திலுள்ள மருத்துவமனையில் இறங்கிவிட்டார். அவர் தவறவிட்ட 4 லட்ச ரூபாய் பணத்தை சபலப்படாமல் எடுத்து பிரேம்லதாவிடம் மனிதநேயத்துடன் ஒப்படைத்துள்ளார் ஆட்டோ ட்ரைவரான நாஞ்சி நயி. "ஆட்டோவை சுத்தப்படுத்தும்போதுதான் பிரேம்லதா அம்மாவின் பணப்பையை பார்த்தேன். நான் என் வாழ்வில் அவ்வளவு பணத்தை பார்த்ததேயில்லை. மருத்துவமனையில் இறக்கிவிட்ட பிரேம்லதா அம்மாவுடையதாக இருக்குமோ என உடனே வஸ்த்ரபூர் போலீசிடம் தகவல் தெரிவித்தேன்" என நெகிழ்ச்சியாகிறார் நாஞ்சி. இதயத்தில் ஏற்பட்ட மூன்று அடைப்புகளை சரிசெய்வதற்கான சிகிச்சை பணம் தொலைந்தவுடன் இருளடைந்த பிரேம்லதாவின் முகம் நாஞ்சி திருப்பித்தந்த பணம் மூலம்தான் தெளிந்திருக்கிறது.