பிட்ஸ் 3 - கொடூர டின்னர்!




Image result for killbill pandey





நண்பர்களுக்கு மகளே பரிசு!

நண்பர்களுக்கு பரிசு தருவது சிறப்பானதுதான். லக்னோவைச் சேர்ந்த தந்தை தன் நண்பர்களுக்கு அளித்த பரிசைக்கேட்டால் அரண்டுபோவீர்கள்.

லக்னோவின் சிதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை தன் 35 வயது மகளை நண்பர்களுக்கு விருந்தாக அளித்து அதிர்ச்சியூட்டியுள்ளார். கம்லாபூரில் நடந்த விழா ஒன்றுக்கு தந்தையுடன் சென்றபோது தந்தை மகளை மான்சிங் என்ற தன் நண்பருடன் பைக்கில் அமரவைத்து மீரஜ் என்பவரின் வீட்டுக்கு கூட்டிச்சென்று கற்பழிப்புக்கு உடந்தையாக இருந்துள்ளார். பதினெட்டு மணிநேரம் கூட்டு வல்லுறவுக்கு பிறகு தப்பித்துவந்த பெண், தாயுடன் இதுபற்றி கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே திருமணமான 35 பெண்மணியான இவருக்கு பதினான்கு வயதான குழந்தையும் உண்டு.

2

கொடூர டின்னர்

நாய் குரைத்தால் பலருக்கும் கோபம் வரும்தான். ஆனால் தென்கொரியாக்காரர் போல யோசிக்க முடியுமா என்பதுதான் டவுட்.

தென்கொரியாவைச் சேர்ந்த அறுபது வயது மனிதர் வீட்டில் அமைதி வேண்டுபவர். அதைக் கெடுப்பதுபோல பக்கத்துவிட்டு நாய் ஒன்று, தெருவே பீதியாகும்படி குரைத்துக்கொண்டே இருந்திருக்கிறது. பொறுக்கமுடியாமல் ஓர்நாள் கல்லை எறிந்து நாயை காலி செய்தார். அதோடின்றி அதனை சமைத்து, சைவம் சாப்பிடும் நாயின் உரிமையாளரையும் கூப்பிட்டு விருந்து வைத்து ஷாக் கொடுத்திருக்கிறார். தென்கொரியாவில் நாய்க்கறி டின்னர் என்பது மிக ஸ்பெஷலான ஒன்று. ஆனால் வளர்ப்புபிராணியான நாயை இப்படி கொன்று தின்றுவிட்டார் என டென்ஷனான இறந்த நாயின் ஓனர், தற்போது டின்னர் மனிதர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். குற்றம் நிரூபணமானால் இரண்டாண்டுகள் ஜெயில் நிச்சயம்.





பிரபலமான இடுகைகள்