நெருப்பில் கருகிய காசு!



Image result for atm theft


நெருப்பில் கருகிய காசு!

ராஜஸ்தானிலுள்ள ஆஜ்மீர் நகரிலுள்ள  பொதுத்துறை வங்கி ஏடிஎம்மில் நடைபெற்ற தில்லான திருட்டில், திருடர்களின் எக்ஸ்பீரியன்ஸ் போதாமையால் கரன்சி மொத்தமும் கரியானது.

அதிகாலை 3 மணிக்கு பர்பெக்ட்டாக காரில் வந்த திருடர்கள் கேஸ் கட்டருடன் ஏடிஎம் புகுந்தனர். எஸ்பிஐ ஏடிஎம் அருகே நின்ற செக்யூரிட்டியை அடித்து சாய்த்துவிட்டு கேஸ் கட்டரின் மூலம் ஏடிஎம்மை அறுத்தனர். ஆனால் பணப்பெட்டியின் இடத்தை சரியான கெஸ் செய்யாததால் நெருப்பு பட்டு 4 லட்சரூபாய் கரன்சியும் தீப்பிடித்து விட்டது. உடனே திருடர்கள் ஸ்பாட்டை விட்டு கிளம்பவும் ஏடிஎம் நெருப்பு அலாரம் அடிக்கவும் நேரம் சரியாக இருந்தது. உடனே உஷாரான போலீஸ் அங்கு வந்து சேரும்போது சிசிடிவி வீடியோவும், கரன்சி சாம்பலும் மட்டுமே மிச்சமிருந்தது. தற்போது சிசிடிவி வீடியோவின் மூலம் திருடர்களை பிடிக்க வலைவீசி வருகிறது போலீஸ்.