காதல் திருடி!



Image result for stolen phone at train



காதல் திருடி!

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அடுத்தவர்களின் கண்களை ஏமாற்றி போன்களை பிடுங்கிச் செல்ல வைத்ததும் கூட காதல்தான்


மும்பை போரிவில்லி ஸ்டேஷன். மேற்கு ரயில்வேயின் லோக்கல் ரயில்களில் மட்டுமே 38 மொபைல்போன்கள் மிஸ்ஸிங் என தொடர்ச்சியாக புகார். என்கொயரியில் பூதமாகி குதித்த போலீஸ் டிவிங்கிள் சோனி, தினால் பார்மர் என இரு டீனேஜ் பியூட்டிகளை அரஸ்ட் செய்தனர். காரணம், ஹிரிஷி சிங் என்ற மன்மத இளைஞனின் மேல் கொண்ட இரு பெண்களும் கொண்ட பிரேமம்தான்."இருபெண்களும் திருடும் போன்களை ஹிரிஷி சிங் விற்றுத்தந்து வந்துள்ளார். கல்லூரியில் படிக்கும் சோனி,பார்மர் இருவரும் திருட்டு பணத்தை சிங்கிற்கு செலவு செய்து டூ இன் ஒன் காதல் வளர்த்துள்ளனர்" என காதல்கதைக்கு ஃபிளாஷ்பேக் சொல்கிறார் டிசிபி புருஷோத்தம் காரத். தற்போது சோனியிடம் செய்த பிராக்டிகல் என்கொயரியில் 9 போன்கள் கிடைத்துள்ளன. விரைவில் பிற போன்களும் மீட்கப்படும் என போலீஸ்வட்டாரம் நம்பிக்கை தெரிவித்துள்ளது