குடைக்குள் நம்பிக்கை!


Image result for kerala umbrella man taha





குடைக்குள் நம்பிக்கை!

கேரளாவின் திருவனந்தபுரத்திலுள்ள தாஹா தன்னம்பிக்கை இழந்த பலருக்கும் ஊக்கம் தருகிறார். மாற்றுத்திறனாளியான தாஹா படுக்கையில் இருந்தபடியே ஐந்து ஆண்டுகளாக குடை தயாரித்து விற்று வருகிறார்.


சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தினால் உடல் செயலிழந்துபோக படுக்கையில் வீழ்ந்தார் தாஹா. தந்தை கற்றுத்தந்த குடை தயாரிக்கும் தொழில் அவரை மீட்டெடுக்க, நண்பர்கள் மனோஜ் பிள்ளை, உன்னி ஆகியோரின் உதவியால்  வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் குடைகளை விற்றுவருகிறார். "நோயால் வாழ்க்கையே இழந்துவிட்டோம் என நினைக்கவில்லை. கடவுள் நம்முடனே இருக்கிறார் என செய்ய முடிந்ததை செய்கிறேன்" என்பவர் தனக்கென ஸ்பெஷலாக உருவாக்கிய காரில் நகரங்களுக்கு செல்வதோடு தன் தேவைகளை தானே செய்துகொண்டு பலருக்கும் தளராத நம்பிக்கையை அளித்து வருகிறார்.