விவசாயம் வளர்க்க அமைச்சர் கூறிய மந்திரம்!


Image result for goa agriculture minister vijay sardesai



ஓம் ரூம் பூம் ஷா!

இந்தியாவில் விவசாயிகளுக்கு விடிவு தரும் மந்திரச்சொல் இனி இதுதான். கோவா விவசாயத்துறை அமைச்சர் விஜய் சர்தேசி இப்படியொரு வேதமந்திர டெக்னிக்கை சொன்னால் விவசாயம் வளரும் என வலியுறுத்தியுள்ளார்.

கோவாவிலுள்ள ஃபடோர்டாவில் அரசு திட்டத்தை தொடங்கி வைத்த விவசாயத்துறை அமைச்சர் விஜய் சர்தேசி, "விவசாயிகள் தங்கள் கஷ்டங்கள் தீர காஸ்மிக் ஆற்றலை அள்ளி வழங்கும் 'ஓம் ரூம் ஜூம் ஷா' என்ற மந்திரத்தை தினசரி இருபது முறை உச்சரித்தால் வாழ்க்கை ஓஹோவென மாறும். பகவான் சிவானந்தின் பக்தையான என் மனைவி இதுகுறித்து கூறியபோதுகூட நான் நம்பவில்லை; ஆனால் அறிவியல் ஆராய்ச்சிகள் என்னை நம்ப வைத்தன" என ஸ்பெஷல் சொற்பொழிவு ஆற்றி பீதியூட்டியுள்ளார். கெமிக்கல் எஞ்சினியராக இருந்து சாமியாரான அவதூத் சிவானந்த் என்பவரின் அரிய கண்டுபிடிப்பே சிவயோகா காஸ்மிக் விவசாயம். இவரின் சக்தி என்ற பெயரிலான மூன்றாம் கண்ணை திறக்கும் சிவயோக வீடியோக்கள் இணையத்தில் பரபர வைரலாகி வருகின்றன.