ஜெகஜால மனைவியின் ஐந்தாவது திருமணம்!


Image result for fraud marriage





ஐந்தாம் கணவரை ஏமாற்றிய ஜெகஜால மனைவி!-ரோனி

ஹரியானாவின் அம்பாலாவில் ஐந்தாம் கணவரை ஏமாற்றியதாக பெண் மீது கொடுக்கப்பட்ட புகார் போலீசையே தலைசுற்ற வைத்துள்ளது.

மூன்றுபேரை திருமணம் செய்த கவிதா தமிஜா, பதினைந்து லட்ச ரூபாய் மற்றும் நகைகளை மோசடி செய்ததாக புரான்சந்த் சைனி என்பவர் அண்மையில் போலீசில் புகார் அளித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு சைனி தனது இரண்டாம் திருமணத்திற்காக நியூஸ்பேப்பரில் விளம்பரம் கொடுத்தார். அதைப் பார்த்துவிட்டு கவிதாவின் தந்தை குர்சரண், சைனியை தொடர்பு கொண்டார். பின் அவ்வாண்டே இருவருக்கும் திருமணம் ஆனது. முதலில் தன் நான்காவது கணவரான ஓம்பிரகாஷை அழைத்து வீட்டில் தங்கவைத்து கசின் என்று உறவுக்கு பெயர்சூட்டினார். பின்னர் தன் முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைகளையும் வீட்டில் தங்க வைத்ததையும் சைனி அனுமதித்தார். பின் தடாலடியாக கணவர் சைனி மீது போலீசில் வன்முறை புகாரை பதிந்த கவிதா,  வீட்டிலிருந்த ரூ.3 லட்சத்தை லபக்கி தலைமறைவாகிவிட்டார். தற்போது போலீஸ் கவிதா மற்றும் அவரது முன்னாள் கணவர்களை தேடிவருகிறது.