முதலாளித்துவத்தால் நசுக்கப்பட்ட தலித்துகள்!



Image result for sv rajadurai



தலித்தியமும் உலக முதலாளித்துவமும்எஸ்.வி.ராஜதுரை

விடியல்



Image result for sv rajadurai





தாராளமயம், உலகமயம் ஆகியவற்றால் தலித்துகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று விளக்க முயன்றிருக்கிறார் எஸ்.வி.ஆர். அதற்கு முதலில் தாராளமயம், உலகமயம் என்னவென்று தெரியவேண்டும் அல்லவா? அனைத்தையும் தெளிவாக விளக்கி உலக முதலாளித்துவம் எப்படி ஏழைகளை நசுக்கி தற்கொலை செய்துகொள்வதற்கான அனைத்து சூழல்களையும் உருவாக்கி ஆனால் சாகாமல் காப்பாற்றுவது எதற்கு என்ற ஆசிரியரின் கேள்விக்கான பதிலை அறிவதே நூலின் சுவாரசியம்.

உயர்கல்வி நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள உயர்வர்க்க மாணவர்கள் எப்படி இந்திய அரசு உதவி பெற்று படித்து அதனை கைவிட்டு பிற நாடுகளில் வாழ்ந்து அந்நாட்டை வளம் பெறச்செய்கின்றனர் என்பதை பல்வேறு அட்டவணைகள், தரவுகள் மூலம் விளக்கு அதிர்ச்சி தருகிறார் ஆசிரியர்.

இஸ்லாமியர்கள் அரசு தலித்துகளை கிராமங்கள் எனும் கட்டுப்பாட்டை தகர்த்து நகரங்களை நோக்கி இழுத்தாலும் அரசியல், பொருளாதார காரணங்களுக்காக அவர்களும் உயர்வர்க்கத்தினருடன் சமரசமாக போனது தலித்துகளை நட்டாற்றில் விட்டது. ஆங்கிலேயர்கள் தம் வியாபாரம் கெடாமல் இருக்க இஸ்லாமியர்களின் முறைகளை  அப்படியே பின்பற்றினாலும் தலித்துகளுக்கு ராணுவம்  உள்ளிட்ட இடங்களில் கிடைத்த மரியாதை சமூகத்தில் அவர்களின் நிலையை மாற்றிய அனுபவம் படிக்க இனிக்கிறது.

ஆங்கிலேயரின் ராணுவத்தில் தலித்துகள் பெற்றிருந்த இன்றியமையாத இடம், நூற்றாண்டு கோபம் என்றே எண்ணத்தோன்றுகிறது. பிராமண அரசர்களை வீழ்த்தியது இதனை உறுதிப்படுத்துகிறது.

இதேநிலையில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக அளிக்கும் நிதியை தலித்துகள் பெறமுடியாமல் தடுப்பதற்கான சிலந்தி வலைப்பின்னல்களை சமூக அமைப்பில் உயர்வர்க்க சதிகாரர்கள் உருவாக்கிய முறை, சமூகத்தின் பொருண்மையை உருவாக்கும் சூத்திர வர்க்கமான தலித்துகள் எப்படி வளர்ச்சி, பொருளாதாரத்தில் புறக்கணிக்கப்படுகிறார்கள், பணக்காரர்கள்- ஏழை இடைவெளி உள்ளிட்டவற்றை நேர்த்தியான உதாரணங்களுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
-கோமாளிமேடை டீம்