கற்பழிப்புகளை தடுத்தும் நிறுத்தும் ஒரே சக்தி!







ராமனாலும் முடியாது!

உன்னாவோ கற்பழிப்பு வழக்கில் சிக்கிய குல்தீப்சிங் செங்காரை காப்பாற்ற முயற்சித்த பாஜக எம்எல்ஏ சுரேந்திரா சிங், "ராமனாலும் வல்லுறவுகளை தடுக்க முடியாது" என பேசி சர்ச்சைத் திரியைக் கிள்ளியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் பைரியா பஸ்தி தொகுதி எம்எல்ஏவான சுரேந்திராசிங், "சமூகத்தில் ஏற்படும் தடம்புரள்வான நிகழ்வுகளால் கற்பழிப்புகள் நிகழ்கின்றன. கடவுளான ராமனே வந்தாலும் இதனை தடுக்க முடியாது. இது மக்களின் குணங்களைப் பொறுத்தது. அரசுக்கு தொடர்பில்லை" என பேட்டியளித்து பிரபலமாகியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக வல்லுறவு தொடர்பான புகார்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. சுரேந்திராசிங் இதற்கு முன்பும் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என்றும், காங்கிரஸை கௌரவர்கள் என்றும், நரேந்திரமோடியை அர்ஜூனன் என்றும் புகழ்ந்து பேசிய ஆளுமை என்பதை இந்திய ஊடகங்கள் இன்னும் மறக்கவில்லை.