வெப்பமயமாதலால் பாதிக்கப்படும் மாநிலங்கள் எவை?








அறுபதுகோடி இந்தியர்களுக்கு ஆபத்து!






வெயில் அதிகரித்து மழைகுறையும் பருவநிலை மாறுபாடுகளால் இந்தியாவின் ஜிடிபி 2.8 சதவிகிதம் குறைத்து 2050 ஆண்டு மக்களின் வாழ்க்கை முறையே மாறும் என உலகவங்கி எச்சரித்துள்ளது

மேற்சொன்ன சூழல்களால் பெரிதும் பாதிக்கப்படப்போவது மகாராஷ்டிராவின் விதர்பா மாவட்டம்தான். ஏறத்தாழ 10 சதவிகித அளவு பட்ஜெட்டில் பாதிப்பு ஏற்படவிருக்கிறது. வெப்பநிலை உயர்வால் இந்தியா மட்டுமல்ல உலகின் பல்வேறு இடங்களிலும் பெய்யும் மழையின் அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. பருவநிலை மாறுபாட்டால் 2050 ஆம் ஆண்டு ஏற்படும் பொருளாதார இழப்பு 1.1 ட்ரில்லியன் டாலர்கள். இந்திய மாவட்டங்களில் ஏற்படும் நுகர்வு இழப்பு மதிப்பு 400 பில்லியன் டாலர்கள். சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் 9 சதவிகிதம் பாதிப்பு ஏற்படுவதாக கருதப்படுகிறது. மகாராஷ்டிராவிலுள்ள பத்து மாவட்டங்கள் அதிக பருவ மாறுதல் விளைவுகளை காணவிருக்கின்றன. "வெப்பநிலை மாறுதல் என்பது மெதுவாக நிகழும் பேரழிவு. இதுபற்றி  நாம் விவாதிக்கவேண்டயது அவசியம்" என்கிறார் ஆராய்ச்சியாளர் முத்துக்குமாரமணி.