இசைத்துறையில் சாதனை செய்த பாடகி! - அரியன்னா கிராண்டே - டைம் 2019




Ariana Grande
ஃபோர்ப்ஸ்



குயில்பாட்டு

அரியன்னா கிராண்டே

நான் புயல், சூறாவளி போன்ற நிகழ்வுகளை எல்லாம் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் அத்தனையிலும் நிஜமான பாடகியாக, மனுஷியாக அரியன்னா இருந்திருக்கிறார். மனிதர்களுக்கு ஏற்படும் சோகம், விரக்தி, மகிழ்ச்சி, கோபம் என அத்தனை உணர்ச்சி வெளிப்பாடுகளுடன் அரியன்னாவின் பாடல்களை மக்கள் கேட்கிறார்கள். ரசிக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள். மக்களை மனப்பூர்வமாக நேசிக்கும் இதயம் கொண்டுள்ளதால், அவர் பாடல்களை அனைவரும் இதயம் உருக கேட்டு வருகின்றனர். அவர் இசைத்துறையில் சாதனைகள் செய்துள்ளார். ஏறத்தாழ சில வாரங்கள் இடைவெளியில் தேங்க்யூ, நெக்ஸ்ட் என்ற இரு பாடல்களை எழுதி பாடி வென்றிருக்கிறார். அவர் அடுத்து என்ன பாடலை உருவாக்குவார் என்று ஆவலோடு நான் காத்திருக்கிறேன்.

ட்ரோய் சிவன்

டைம்


கருத்துகள்