பெருந்தொற்றைப் பயன்படுத்தி இணையத் தாக்குதல்களை நடத்துகிறார்கள்!






Phishing, Fraud, Cyber Security, Hacking, Steal, Crime



பெருந்தொற்று பாதிக்காத நாடுகளை எளிதாக இணையத் தாக்குதல்களுக்கு உள்ளாக்க முடியும்!

ராஜேஸ் மௌரியா, ஃபோர்டிநெட்

அண்மையில் இணையத்தால் தாக்கப்பட்ட நாடுகள் பற்றிய செய்தியை எப்படி பார்க்கிறீர்கள்?

இன்று அனைத்து நாடுகளும் கோவிட் -19 பாதிப்பால் பாதிக்கப்பட்டு சரியான மருத்துவப் பொருட்கள், சிகிச்சைகள், தனிமைப்படுத்தும் வசதிகள் இன்றி கஷ்டப்படுகின்றன. இந்த நேரத்தை இணையத்தாக்குதல்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இப்போது உங்கள் மின்னஞ்சலுக்கு, யாரோ அனுப்பிய மின்னஞ்சல் வந்தால்கூட நிலைமையின் தீவிரத்தில் நீங்கள் அதனை திறந்து பார்த்துவிடும் வாய்ப்புள்ளது. அதனை யோசித்துப்பார்த்து திறக்கலாமா என முடிவு செய்வதற்கு கூட இப்போது பலருக்கும் நேரம் இல்லை என்பதே உண்மை.

இந்த தாக்குதல் எப்படி தொடங்கியது?

மின்னஞ்சல் வழியாக தொடங்கியது. இப்போது நாம் அனைவருமே இணையம் வழியாக பணிபுரிந்து வருகிறோம். இணையத்தில் விளையாடுகிறோம். படங்கள் பார்க்கிறோம். செய்திகளை அனுப்புகிறோம். நாள் முழுக்க பெரும்பகுதி நேரம் நாம் இணையத்தில் உள்ள சூழலில் போலியான பல்வேறு அமைப்புகளின் பேரில் மின்னஞ்சல்களை அனுப்பி தாக்குகிறார்கள் சைபர் குற்றவாளிகள்.

எந்த துறைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன?

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் சமையல் எரிவாயு, மின்சாரம், எரிபொருள் ஆகிய துறைகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பெருந்தொற்று நேரத்தில் உள்ள ஆபத்துகள் என்னென்ன என்று நினைக்கிறீர்கள்?

கோவிட் -19 பெயரில் பல்வேறு மால்வேர்கள், ரான்சம்வேர்கள், தொலைதூரத்தில் இருந்து இயக்கும் டிரோஜன்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கணினிகளைத் தாக்கி தகவல்களை திருடி வருகின்றனர். இ வணிகத்திலும், பிட்காயின் வணிகத்திலும் மக்கள் ஈடுபட்டு வருவதால் இந்த தாக்குதல்களுக்கு எளிதாக இலக்காகின்றனர்.

ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்

சுதீர் சௌத்ரி


கருத்துகள்